ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்

அய்யப்பனுக்கு இரவில் பாடப்படும் ஹரிவராசனம் பாடலில் தவறு இருப்பதால், அந்த தவறை திருத்தி மீண்டும் யேசுதாஸ் பாடினால் சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளதாக தந்திரி கூறி உள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. … Continue reading ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்